திருச்சி மாநகரில் நாளை (17.09.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (17.09.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நீதிமன்ற வளாகம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (17.09.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சார பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டித்தெரு,

பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்சாண்டர் சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணா நகர், குட்பிசா நகர்,  உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழச்சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர் நான்கு வழி சாலை, அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம் சாலை, சோனா மீனா தியேட்டர், நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில்,

கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா சாலை, வயலூர் சாலை மற்றும் பாரதி சாலை ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94 98 79 49 87 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO