திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற இருந்த தடகள போட்டிகள் மழையின் காரணமாக தள்ளிவைப்பு

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற இருந்த தடகள போட்டிகள் மழையின் காரணமாக தள்ளிவைப்பு

திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினரால் நடத்தப்பட இருந்த இளைர்களுக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் 2021 ஸ்டேட் பாங்க் எஸ் மோகன் 2021என்ற பெயரில் நவம்பர் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற இருந்தது.

அதிதீவிர மழையின் காரணமாக திருச்சிக்கு மஞ்சள் எச்சரிக்கை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நடைபெற இருந்த போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn