லஞ்சப்பணம் பெற்றபோது கையும் களவுமாக பிடிப்பட்ட பில்கலெக்டர்

லஞ்சப்பணம் பெற்றபோது  கையும் களவுமாக பிடிப்பட்ட பில்கலெக்டர்

திருச்சி, கே.கே.நகர், இந்திராகாந்திதெருவைச் சேர்ந்த திரு.சீனிவாசன் என்பவர் திருச்சி கே.கே.நகரில் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி

 விண்ணப்பித்ததன் பேரில், காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய Zone-IV, Ponmalai Zone, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு-65க்குரிய பில் கலெக்டர் திரு.செபாஸ்தியான். வயது 56/25, த/பெ ஜோசப் என்பவரை அணுகியபோது அவர் ரூ.12,000/- வரி நிர்ணயம் செய்ய கையூட்டு கேட்டு, பின்னர் ரூ.10,000/-ஆக கையூட்டு தொகையை குறைத்துக்கொண்டு கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக 11.06.2025ந்தேதி திரு.சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் திரு.சக்திவேல், திரு.பிரசன்ன வெஙகடேஷ், திரு.பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பில்கலெக்டர்

 திரு.செபஸ்தியான் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை சீனிவாசனிடமிருந்து 12.06.2025ந்தேதி அவரது அலுவலகத்தில் வைத்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். மேலும் திரு.செபஸ்தியான் அவர்களை கைது செய்து சோதனை செய்தபோது அவரிடம் கணக்கில் வராத ரூ.24,000/- இருந்தது, சந்தேகத்தின் பேரில் அத்தொகை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி பொன்மலை கோட்ட, கார்ப்பரேசன் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision