இலவச வீட்டு மனை பட்டா கேட்டு CPM போராட்டம்

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு CPM போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட நேரம் வரிசையில் மனு கொடுக்க காத்திருந்தனர்.

நூற்றுக்கணக்கான பொதுமக்களும் காத்திருந்தனர் கணினி சேவை மையம் கோளாறு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகியும் மனு ரசீது வழங்கப்படவில்லை பழைய மடிக்கணினியை பயன்படுத்துவதால் தொடர்ந்து இது போன்ற நிலை ஆகவே பழுதடைந்த மடிக்கணினி உடனடியாக மாற்றி பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்குமாறு கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மேற்கு பகுதி செயலாளர் எம் ஐ ரபிக் அகமத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், G.வெற்றிச்செல்வன், N. கார்த்திகேயன், பகுதி குழு உறுப்பினர்கள் எம் வள்ளி, A.அப்துல், கிளைச் செயலாளர், எஸ்.முருகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision