சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் குச்சி - காவு வாங்கும் முன் கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் குச்சி - காவு வாங்கும் முன் கண்டுகொள்ளுமா  மாநகராட்சி?

Advertisement

திருச்சி மிளகுபாறையில் இருந்து செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். ஆட்சியர் அலுவலக சாலை என்பதால் அதிகாரிகள், அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூரியும் இருப்பதால் மருத்துவர்கள் என நாள்தோறும் அந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் ‌

Advertisement

இந்நிலையில் அந்த சாலையில் செல்லும் பாதாள சாக்கடையில் குழி விழுந்த நிலையில் அங்கு குச்சியை வைத்து கொடிகள் போல சிவப்பு வெள்ளை என கட்டி பறக்க விட்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாகவே அந்த சாலையில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியின் முக்கியமான சாலையில் இது போல் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் மிகுந்த அச்சத்தை யும் உயிர் காவு வாங்கக் காத்திருக்கிறது எனவே மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM