ரயில் நிலையத்தில் மீீட்கப்பட்ட பொருட்கள் பயணியிடம் பத்திரமாக ஒப்படைப்பு- திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை

ரயில் நிலையத்தில் மீீட்கப்பட்ட பொருட்கள் பயணியிடம் பத்திரமாக ஒப்படைப்பு- திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை
இன்று 06.04.2025 திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைகை வண்டியில் பயணி ரமேஷ் என்பவர் திருச்சியிலிருந்து அரியலூர் வரை செல்லும் போது தனது பையை PF எண். 03 இல் விட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். அதன்பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு மேற்படி பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி பையில்
ரொக்கம் - ரூ. 26,500/-
சாம்சங் போன் - ரூ. 10,000/-
நோக்கியா போன் - ரூ. 2,000/-
கண்ணாடி - ரூ. 2,000/-
ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பிற ஆவணங்கள்
மொத்த மதிப்பிடப்பட்ட மதிப்பு: ரூ. 40,500/- இருந்தன.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினரின் துரிதமான நடவடிக்கைக்காக பயணியும் அவரது குடும்பத்தினரும் தங்களின் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision