திருச்சியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறிய 1000 பேர் மீது வழக்குப்பதிவு!!

திருச்சியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறிய 1000 பேர் மீது வழக்குப்பதிவு!!

தமிழகத்தை பொறுத்தவரை ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டு திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு நிகழ்ந்தது.

இதில் திருச்சி மாநகரில் நேற்று  முழு பொதுமுடகத்தை மீறி கடைகளை திறந்தவர்கள், கூட்டமாக கூடியவர்கள் என 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் சுற்றித் திரிந்த வாகனங்களில் வந்த 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.