திருச்சியில் NHRD சார்பில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டி

திருச்சியில் NHRD சார்பில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டி

திருச்சி மனிதவள மேம்பாட்டுப் பிரிவு சார்பில் நிறுவனங்களுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி தேசிய கல்லூரி யோகா அரங்கில் நடைபெற்றது. திருச்சியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நேரத்தை பயனுள்ள வகையில் மாற்ற இப்போட்டியானது நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து மூன்று அல்லது ஐந்து நபர்கள் பங்கு கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. திருச்சியிலிருந்து சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர் பாஸ்கரன் முதல் பரிசு பெற்றார். தியாகராஜன் (டென்பாத்  சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் ) இரண்டாவது பரிசையும், செல்வகுமார் (சுந்தர் ரியல் எஸ்டேட்) 3வது பரிசையும், எழிலரசன்( துப்பாக்கி தொழிற்சாலை) நான்காவது பரிசையும், வெங்கடேசன்(துப்பாக்கி தொழிற்சாலை) ஐந்தாவது பரிசையும் வென்றனர். ஒவ்வொரு பணியாளர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் போட்டியானது ஊக்கத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கும் விதத்தில் அமைந்தது. ஒவ்வொரு போட்டியாளர்களும் உற்சாகத்தோடு போட்டியில் பங்கு கொண்டனர்.

திருச்சி NHRD விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் போட்டி ஏற்பாடுகளையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO