"ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025" நிகழ்ச்சிக்கான இலச்சினையை வெளியிட்ட முதலமைச்சர்

"ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025" நிகழ்ச்சிக்கான இலச்சினையை வெளியிட்ட முதலமைச்சர்

சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டின் மே 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025" (Sree Narayana Guru Harmony 2025) நிகழ்ச்சிக்கான இலச்சினையை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது, சிவகிரி மடத்தின் சர்வதேச அமைப்புச் செயலாளர் திரு. சுவாமி வீரேஸ்வரானந்தா, இங்கிலாந்து நாட்டின் சிவகிரி ஆசிரமத்தின் தலைவர் பைஜு பாலக்கல், செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் கணேசன் சிவன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision