திருச்சியில் தொடர் குற்ற நடவடிக்கை - குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!!

திருச்சியில் தொடர் குற்ற நடவடிக்கை -  குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!!

Advertisement

திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சக்திவேல் ( 29 ) என்பவர் கடந்த 23.01.2021 அன்று மதியம் டீ குடிப்பதற்காக சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியசாமி டவர் அருகே சென்று கொண்டிருந்த போது, பிராங்ளின் நிக்சன்ராஜ் (எ) பிராங்ளின் என்பவர் சக்திவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் வைத்திருந்த பணம் ரூபாய் 650-ஐ பறித்து கொண்டு சென்றுவிட்டதாக கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நிக்சன்ராஜ் (எ) பிராங்ளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Advertisement

இவ்வழக்கினை கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அவர்கள் புலன் விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்பிள்ளை ரோடு, பகுதியைச் சேர்ந்த பிராங்ளின் நிக்சன்ராஜ் (எ) பிராங்ளினை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட நிக்சன்ராஜ் (எ) பிராங்ளின் என்பவர் மீது ஏற்கனவே திருச்சி மாநகரம், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 1 வழக்கும், கோட்டை காவல் நிலையத்தில் 2 வழக்கும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 1 வழக்கும், கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரிய வந்தது. 

Advertisement

எனவே, மேற்படி நிக்சன்ராஜ் (எ) பிராங்ளின், தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவு படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் நிக்சன்ராஜ் (எ) பிராங்ளின் குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.