10 நாட்களுக்கு மேலாக தொடர் மின்வெட்டு - டிரான்ஸ்பார்மை சரி செய்ய விவசாயிகள் மனு

தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி விவசாய அணித் தலைவர் எஸ் செல்வம் சார்பாக வியாழன் மேடு,கீழப்பட்டி, போசம்பட்டி, புலியூர், குழுமணி, கோப்பு, நெய்தலூர் காலனி, போதாவூர், தாயனூர், பள்ளக்காடு ஆகிய கிராமங்களில் 800க்கும் மேற்பட்ட நிலங்களில் மலர் சாகுபடி செய்யப்பட்டு,
மின்விநியோகம் இல்லாமல் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளது.கீழப்பட்டி சாலையில் உள்ள போசம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து மின்விநியோகம் இல்லாமல் கடந்த 10 நாட்களுக்கு மேல் உள்ளது இது சம்பந்தமாக
பலமுறை புகார் கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை.ஆதலால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும் பயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தலைமை பொறியாளர் அவர்களுக்கு, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இன்று மனு கொடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision