2ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை.

2ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை.

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் வலிப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மாணவர் 2.48 மணியில் சோர்வாக இருந்து இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சிசிடிவி காட்சி நேற்று வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லாது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் அந்த மாணவர் இருதய பாதிப்பு உள்ளதால் ஏன் தனி கவனம் செலுத்தவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் தற்போது பெற்றோர்கள் சிலர் முன்னிலையில் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காரணமாக பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision