"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் களஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் அவர்கள் இன்று 18/6/2025 திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டை, கூத்தபார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
மற்றும் இ- சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும்,கிருஷ்ண சமுத்திரம், கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், அவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடி, பின்பு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision