குடிநீர் புகார் - அதிகாரிகளுடன் மேயர் ஆய்வு

குடிநீர் புகார் - அதிகாரிகளுடன் மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2 மற்றும் 3 வார்டு எண் -16 மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி, கலைஞர் நகர் பகுதி குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதன் பேரில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் வீடுகளில் நேரில் சென்று குடிநீரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயர் மு.அன்பழகன் உறுதியளித்தார்.

பின்னர் தாராநல்லூர் வசந்தா நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியையும், 20 வது வார்டு பூலோகநாதர் கோவில் தெரு பகுதியில் புதிதாக நியாய விலை கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் சிவபாதம் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் சாலைத் தவவளன் , சரவணன் மற்றும் உதவி செயற்பொறியாளர் இளநிலை பொறியாளர், மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், எல் ஐ சி சங்கர், சண்முக பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision