கல் கொடுத்து 6 பவுனை களவாடிய டூப் போலீஸ்

கல் கொடுத்து 6 பவுனை களவாடிய டூப் போலீஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியில் சாலையில் வயதான பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நாங்கள் காவல்துறை (சீருடை அணியாமல்) என கூறியுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் ஏன் தனியாக நடந்து செல்கிறீர்கள்.

இப்பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறி அந்த வயதான பெண் அணிந்திருந்த 6 பவுன் செயினை அவரிடம் இருந்து கழட்டி வாங்கி இவர்கள் கையில் கல் வைத்து வைத்திருந்த பையை அவரிடம் கொடுத்துவிட்டனர். ஆனால் நகை உள்ள சிறிய பையை அந்த இரண்டு நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முககவசம் அணிந்து வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டிற்கு சென்ற அந்த வயதான பெண் பையை திறந்து பார்த்தபோது நகைக்கு பதிலாக அதில் கல் இருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் நகையை ஏமாற்றி திருடி சென்ற போலி போலீசை அடையாளம் கண்டு வருகிறது நிஜ போலீஸ்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision