பெண் ஓட்டுனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட E-ஆட்டோக்கள்

பெண் ஓட்டுனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட E-ஆட்டோக்கள்

சர்வதேச ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்டம் 3000-த்தின் 2023-24 ம் ஆண்டிற்கான, மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் கனவு திட்டமான "அறம் - சிங்க பெண்ணே" என்ற திட்டத்தின் மூலம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பாக, 39 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, E - ஆட்டோ இலவசமாக வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வு திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு, சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் (2025-26) முருகானந்தத்தின் Excel Maritime & Logistics Pvt Ltd (CSR Donor) நிறுவனம் மிக முக்கிய பங்களிப்பை செய்திருந்தது. 

சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் (2025-26) முருகானந்தம் ,முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார், மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாவட்ட ஆளுநர் தேர்வு கார்த்திக், மாவட்ட ஆளுநர் நியமனம் சுப்பிரமணி, காவேரி மெடிக்கல் சென்டரின் இயக்குனர் அன்புச்செழியன்,

Rotary Public Image Co-ordinator ரமேஷ் பாபு, தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision