மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிரேன் வாகன மோதி மூதாட்டி பலி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிரேன் வாகன மோதி மூதாட்டி பலி

திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (69). இவர் இன்று இபி பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டி சாலையை கடக்கும் பொழுது, அவ்வழியாக வந்த கிரேன் வாகனம் மோதி கீழே விழுந்தார்.

 மூதாட்டியின் தலை பலத்த காயமடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கண்டோண்மென்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision