மின் இணைப்பு ஆய்வு அதிகாரிகள் அதிரடி

மின் இணைப்பு ஆய்வு  அதிகாரிகள் அதிரடி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உத்தரவுகிணங்க திருச்சி பெருநகர மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் உத்தரவின் பேரில் பெருநகர்/திருச்சி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) கூ.சிவலிங்கம் அவர்கள் தலைமையில் திருச்சி/கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கா.முத்துராமன் 24.05.2022 அன்று உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி மின்பொறியாளர்களுடன் திருச்சி பெருநகர மின்வினியோக வட்டம் திருச்சி/கிழக்கு கோட்டத்தை சார்ந்த திருவெறும்பூர் உபகோட்டம் திருவெறும்பூர் பிரிவிற்குப்பட்ட D-நகர், வேங்கூர், பத்தாளப்பேட்டை, திருவெறும்பூர், சுருளிகோவில், பிரகாஷ் நகர், காவேரி நகர், பாரதிபுரம், சுப்பிரமணியபுரம், கக்கன் காலரி, V.O.C நகர், I.A.S நகர், ராஜகணபதி நகர், பெல்பூர், கூத்தைப்பார், காந்தி நகர், திருவெறும்பூர் தொழற்பேட்டை, மலைக்கோவில், தென்றல் நகர், பகவதிபுரம், தோகூர், நடராஜபரம் மற்றும் கிருஷ்ணாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள 2500 மின் இணைப்புகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்றும் மின்நுகர்வோர்கள் மின்விதி மீறல் மற்றும் மின்திருட்டு போன்ற குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் பொது மக்கள் தங்களது மின் இணைப்பிணை எந்த பயன்பாட்டிற்கு வாங்கினரோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் உபயோகப்படுத்தி அபராதத்தை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO