மின்சார சேமிப்பு வார விழா மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு

மின்சார சேமிப்பு வார விழா மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மின் சேமிப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் திருச்சி மின் பகிர்மான வட்டம் /பெருநகரம்/திருச்சி சார்பில் (14.12.2023) முதல் (20.12.2023) வரை மின் சேமிப்பு வார விழா கடைபிடிக்கப்பட உள்ளது.

இதன் பொருட்டு மின் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் துவக்க விழாவான 14.12.2023 (வியாழக்கிழமை) அன்று திருச்சி தென்னூர் மண்டல அலுவலகத்தில் பொறிஞர் S.பிரகாசம். மேற்பார்வை பொறியாளர், மன்னார்புரம், திருச்சி முன்னிலையில் பொறிஞர்.S. செடியழகன், தலைமை பொறியாளர் / பகிர்மானம் / திருச்சி காலை 10:30 மணியளவில் மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில், திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் சேமிப்பு பதாகைகள் ஒட்டிய வாகனம் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நகரியம் சார்ந்த பகுதிகளில் மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனம் தொடர்பான ஆடியோ ஒளிபரப்பப்பட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision