தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் கே என் அருண் நேரு தொடங்கி வைத்தார்

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்-பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என் அருண் நேரு தொடங்கி வைத்தார்.தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் படியும், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலோடு
திருச்சி மாவட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக மாபெரும் விழிப்புணர்வு முகாம் இன்று சமயபுரத்தில் உள்ள ரெட்டியார் மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமில் பெரம்பலூர், குளித்தலை, மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி துறையூர், முசிறி, தொட்டியம், தா .பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு ,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்குபெற்றன.
மேலும் வாழை ஆராய்ச்சி நிறுவனம், தொழில் குழுமங்கள், வங்கியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ,துறை அலுவலர்கள், தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை வழங்கினர். தொழில் முனைவோருக்கான அனைத்து விதமான சந்தேகங்கள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள், வணிகம் செய்ய வேண்டிய முறை, வங்கிக்கடன் பெற தேவையான ஆவணங்கள், அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் உட்பட அனைத்து சந்தேகங்களுக்கும் முறையான தீர்வுகள் வழங்கப்பட்டு தொழிலில் வெற்றி பெற வழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டது.
இது மட்டுமன்றி, பல்வேறு அரசுத் துறைகள் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்களை எடுத்துக் கூறினர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision