மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் இருவர் மரணம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் இருவர் மரணம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் நேற்று காலை மின் வாரிய ஒப்பந்த ஊழியர் மருங்காபுரியை சேர்ந்த உறவினர்களான கலாமணி (42) மற்றும் மாணிக்கம் (37) ஆகியோர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலைமாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் உயிரிழந்தார். 

இந்த சமயத்தில் கீழிருந்து மேல் ஏறிக் கொண்டிருந்த மாணிக்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் உயிரிழந்து தொங்கிய நிலையில் இருந்த கலாமணியை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இறந்த இருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இறந்ததற்கு முக்கிய காரணம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் ஆகும். 

ஆகையால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்தவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision