காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நேற்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நேற்று காலமானார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் வசித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லோகம்பாள் (68) உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார்.

   குமுளூர் ஊராட்சியில் உள்ள தேரோடும் வீதியில் வசிக்கும் லோகம்பாள். இ. காங்கிரஸ் கட்சியில் திருச்சி மாவட்ட மகளிரணி தலைவியாக பதவி வகித்தவர். இந்நிலையில் கடந்த 1991 ம் ஆண்டில் லால்குடி சட்டப் பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரும் தற்போதைய திமுக முதன்மை செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு வை தோல்வி அடைய செய்தார்.

   1991 ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை லால்குடி சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி பணியில் ஈடுபட்ட அவர் இந்நாள் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். லோகம்பாளுக்கு புற்றுநோயால் அவதியுற்ற அவர் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

உயிரிழந்த லோகம்பாளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn