அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி படுகாயம்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி படுகாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கரிகாலன். இவர் தனது வயலில் விளைவித்த நெல்லை எரகுடியில் உள்ள அரசுநெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அப்போது தன்னுடைய நெல்லை வைப்பதற்கு இடமில்லாமல் நிலைய அலுவலர் முருகேசனிடம் கேட்டபொழுது அவர் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார்.

அப்போது அந்த இடத்தில் மின்சார வயர் தரை வழியாக சென்று கொண்டிருந்தது அந்த ஒயரை நீங்கள் அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் உங்கள் நெல்லை கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை ஏதுமறியாத விவசாயி அதனை நம்பி அந்த ஒயரில் கை வைத்த போது அதில் சென்ற மின்சாரமானது அவரை தாக்கியதில் நெஞ்சு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது அவர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மின்சாரம் தாக்கியது தொடர்பாக மின் வாரிய அலுவலர்களோ  நெல் கொள்முதல் அலுவலரோ யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறனர். அலட்சியமாக இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO