இரண்டாம் நிலை சிறைக்காவலர்களுக்கான 6 மாத கால பயிற்சி இன்று தொடங்கம்

இரண்டாம் நிலை சிறைக்காவலர்களுக்கான 6 மாத கால  பயிற்சி இன்று தொடங்கம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020-ஆம்ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 124 சிறைக்காவலர்களுக்கு கடந்த 08.03.2022-ஆம் தேதி பணிநியமண ஆணை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள்துறையில் தேர்வான ஆண் மற்றும் பெண் சிறைக்காவலர்களுக்கான 6 மாத கால அடிப்படை பயிற்சி துவங்கும் விழா இன்று (14.03.22)-ஆம் தேதி திருச்சி மத்தியசிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளி, திருச்சியில் நடைபெற்றது.

இத்துவக்க விழா நிகழ்ச்சியில் க.ஜெயபாரதி, துணைத் தலைவர், சிறைகள் மற்றும் சீர்த்திருத்தபணிகள் துறை, திருச்சி சரகம், .எம்.செந்தில்குமார், சிறை கண்காணிப்பாளர், மத்தியசிறை, திருச்சி மற்றும் இரா.ராஜலெட்சுமி, சிறை கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை, திருச்சி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், சிறப்புரையாற்றினார். பயிற்சி கையேட்டினை வெளியிட்டு

இச்சிறப்புரையில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிக்கு புதியதாக பணி நியமனம் பெற்ற நபர்களை வாழ்த்தியும், பயிற்சி காலங்களில் நீங்கள் எடுக்கும் பயிற்சிதான் எல்லாவற்றிக்கும் அடித்தளமாக அமையும் என்றும், பொது இடத்தில் சவால்களை சந்திக்க உதவியாக இருக்கும் என்றும், பயிற்சி பெறும் இடத்தில் மட்டுமல்லாது, பொது இடத்திலும் தனிப்பட்ட முறையிலும் ஒழுக்கத்தை பேணிகாக்க வேண்டும் என கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO