ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை- அதிரடி தீர்ப்பு

ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை- அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் கே வி நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வைத்தீஸ்வரன் ஆக்சிசன்   பிரைவேட் நிறுவனத்தில் வயலூர் சீனிவாச நகரை சேர்ந்த சரவணன் என்பவர் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 நிறுவனத்திற்கு கூடுதல் மின்னழுத்தம் தேவைப்பட்டதால் 175 கிலோவாட்டில் இருந்து 200 கிலோ வாட் இருக்கு மின்னழுத்தம் மாற்றம் செய்ய கடந்த 07/11/2005 ஆம் ஆண்டு அப்பொழுது திருச்சி மன்னார்புரம் மின்சார வாரியத்தில் கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்த ஆறுமுகம் என்பவரிடம் சரவணன் மனு அளித்துள்ளார். மேற்கண்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஆறுமுகம் கூடுதல் மின்னழுத்தம் வழங்க

 பத்தாயிரம் லஞ்சமாக கேட்டு அதில் முன்பணமாக ஐந்தாயிரம் மட்டும் கேட்டுள்ளார்.  சரவணன் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் கடந்த 07/11/2005 ஆம் ஆண்டு திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் டிஎஸ்பி இடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது டிஎஸ்பி சுரேஷ்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்ட பொழுது

சரவணிடமிருந்து ஆறுமுகம் லஞ்சப்பணம் ஐந்தாயிரம் பெற்ற போது கையும் களவுமாக பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து 18/06/2025-ம் தேதி ஆறுமுகம் முன்னாள் கூடுதல் தலைமை பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பவருக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-படி ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்

பத்தாயிரம் விதித்து தண்டனையை  திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும் சிறப்பு அரசு வழக்கறிஞர் கோபி கண்ணன் அவர்கள் ஆஜராகி தண்டனை பெற்று தர உதவி புரிந்தார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision