விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி

 திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் இந்து முன்னணி பேரியக்கத்தின் நிர்வாகிகள் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காப்பு கட்டி எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அருள்புரிய வேண்டுதல் வைத்தனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிலை வைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது மாவட்ட பேச்சாளர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சப்தரிஷி, ராஜசேகரன் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் நித்திஷ்குமார் மற்றும் மண்டல் பொறுப்பாளர்கள் கணேஷ் குமார் சக்திவேல் லோகேஷ்வரன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO