சாலையில் பணத்துடன் தவறவிட்ட பர்ஸ்,உரியவரிடம் ஒப்படைப்பு

சாலையில் பணத்துடன் தவறவிட்ட  பர்ஸ்,உரியவரிடம் ஒப்படைப்பு

 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பணத்துடன் தவற விட்ட பர்ஸ், திங்கட்கிழமை இரவு போலீஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த இடையப்பட்டியை சேர்ந்த மா.மருதை(50) மற்றும் திருச்சியை சேர்ந்த நடன கலைஞர்கள் சுரேஷ், சூர்யபிரகாஷ், கென்னடி ஆகியோர் வெவ்வேறு விஷேங்களுக்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை மணப்பாறை பெரியார் சிலை பகுதியில் நின்றுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் பர்ஸ் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

அதனை எடுத்து பார்த்தபோது அதில் ஆதார் கார்டு ஒன்றும், ரூ.6 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பர்ஸை தவறவிட்ட விராலிமலை மணமெட்டுப்பட்டியை சேர்ந்த சு.ஹரிகிருஷ்ணன்(20) காவல்நிலையம் அழைக்கப்பட்டு ஆய்வாளர் சு.கருணாகரன் முன்னிலையில் பணத்துடன் பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. ரொக்கத்துடன் சாலையில் கிடந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த நபர்களை அனைவரும் பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.

https://t.co/nepIqeLanO