ஸ்ரீரங்கத்தில் மாணவர் சேர்க்கை பேரணி

ஸ்ரீரங்கத்தில் மாணவர்  சேர்க்கை பேரணி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாணவர்கள் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது பேரணியை ஸ்ரீரங்கம் கோட்டாச்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீடு மக்கள் அனைவரும் அறிந்து தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டிமாணவர் சேர்க்கைப் பேரணி பள்ளி மேலாண்மைக் குழுவினர் முன்னெடுத்து நடத்தினர்.

தமிழ்வழிக் கல்வியில் படிக்கின்ற மாணவர்களுக்கு20% இடஒதுக்கீடுஅரசு வேலைவாய்ப்பில்அதை அறிந்துதமிழ் வழிக் கல்வியில் தங்கள் குழந்தைகளை  சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கைப் பேரணியை தன்னார்வலர்கள் முன்னெடுத்துநடத்தப்பட்டது.இதில்,திருச்சி மாவட்டம்முதன்மைக் கல்வி அலுவலர் 'மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வட்டாரக் கல்வி அலுவலர்களும்,வட்டார வள மையமேற்பார்வையாளர்,ஆசிரியர் பயிற்றுனர்களும்இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும்,வட்டாரஒருங்கிணைப்பாளர்களும்,தன்னார்வலர்களும்தலைமை ஆசிரியர்களும்,ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO