வளர் இளம் பருவ குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணர்வு

வளர் இளம் பருவ குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப்பள்ளியில் வளர் இளம் பருவ குழந்தைகளுக்கான சுகாதார விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார செவிலியர் ஏ. அமுதா இளம் பருவ குழந்தைகள் புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது பெண் குழந்தைகள் சமுதாயத்தில் நடந்து கொள்ளும் முறை தன் சுத்தம் மாணவர்களின் சுய ஒழுக்கம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் சுகாதார உதவியாளர் பி. அமுதா அங்கன்வாடி பணியாளர்கள் இரா. இந்திராணி ஏ. பூங்கோதை கீ. புவனேஸ்வரி பி. மஹாலட்சுமி பள்ளி ஆசிரியர் த.வானதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் பா.கீதா நன்றியுரை கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
#டெலிகிராம் மூலமும் அறிய.....