திருச்சியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து

திருச்சியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து

திருச்சி எல்ஐசி காலனியில் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த மின்சாரப் சேமிக்கும் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவுவால் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அருகிலிருந்த பிரிட்ஜ் தீ பற்றி வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்த வந்த மின்சார ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு. இந்த தீ விபத்தால் சமையலறை உள்ள பொருட்களை அனைத்து எரிந்து சாம்பலாயின. மேலும் இந்த தீ விபத்து குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO