10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சர்வதேச தர பிஎஸ்சி ஹாஸ்பிட்டாலிட்டி படிப்பு

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவருக்கு ( BSc hospitalty and Hotel Administration )3 வருட முழுநேர பட்ட படிப்பும், ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு( diploma in food production) பட்டைய படிப்பும் மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் அதன் பதனிடுதல்( craftman ship course in food production and patisserie) ஆகிய படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சென்னை தரமணியில் உள்ள( Institute Of Hotel Management Catering Technology and applied nutrition) இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் இன் டெக்னாலஜி அண்ட் அப்ளை நியூட்ரிஷியன் நிறுவனமானது ISO 90012015 MLதரச் சான்று பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆனது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமையப்பெற்ற தன்னாட்சி நிறுவனம் மேலும் இந்நிறுவனம் சர்வதேச மங்கிகாரம் பெற்றது ( American Council of business)அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் பிசினஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்சு நாட்டில் உள்ள Lycee Nicolas appert catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ( Hotel Management Institute survey) ஹோட்டல் மேனேஜ்மென்ட் இண்டஸ்ட்ரி சர்வே 2022 இன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. CEO world magazine நடத்திய உலகின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலகத்தர வரிசையில் 13-வது இடத்தில் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருக்க வேண்டும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூபாய் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் இயக்கப்படும் இப்ப படிப்பினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதலைகளில் உள்ள உயர்தர உணவகங்கள் விமானத்துறை
கப்பல் துறை மற்றும் சேவை துறைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும் ஆரம்ப மாத ஊதியமாக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பெறலாம் பின்னர் திறமைக்கேற்றவாறு ரூபாய் 50,000 முதல் 70 ஆயிரம் வரை பதவி உயர்வில் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ ராஜா காலனி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை திருச்சிராப்பள்ளி 62001 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு மாப் பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision