திருச்சியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு - எஸ்.ஐ படுகாயம் 8 பேர் மீது வழக்கு

திருச்சியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு - எஸ்.ஐ படுகாயம் 8 பேர் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ்அரசூர் ஊராட்சியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம நிர்வாகிகள் கல்லக்குடி  காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளனர். கல்லக்குடி காவல் நிலையத்தில் போலீசார் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கீழ அரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கல்லக்குடி உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீசார் கீழ அரசூர் கிராமத்திற்கு சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது  என்று கூறிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த   அனைத்து பலகைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதாக தகவல் தெரிந்து இரண்டாவது முறையும் சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கூறி உள்ளனர். மீண்டும் மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கலைந்து போக சொன்ன போது  அவர் மீது சரமாரியாக  ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டவர்கள் ஆத்திரத்தில் கல்வீசி தாக்கினர். இதில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மீது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலிதவி பெற்று மேல் சிகிச்சைக்காக  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறன்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே கிராமத்தில் கடந்த சில ஆண்டு முன்பு அனுமதி யின்றி நடத்திய ஜல்லிக்கட்டில்  லால்குடி இன்ஸ்பெக்டரை தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn