இயேசு அழைக்கிறார் - திருச்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!!

இயேசு அழைக்கிறார் - திருச்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!!

கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

"இயேசு அழைக்கிறார்" என்ற பெயரில் மத பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திவரும் பால் தினகரனின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். காலை எட்டு மணிக்குத் தொடங்கிய சோதனை, சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி நடத்தி வந்த நிலையில் தற்போது திருச்சியிலும்  வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள இயேசு அழைக்கிறார் கிளை அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.