முதியோர் இல்லத்தில் வாரிசு பொங்கல்

முதியோர் இல்லத்தில் வாரிசு பொங்கல்

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திருச்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் வாரிசு பொங்கல் வைத்து முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகளும் காலை உணவு வழங்கி கொண்டாடினார்கள்.

முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா சார்பில் நிகழ்ச்சிகள்  ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து  ஆர்.கே ராஜா ‌ கூறுகையில்.....நடிகர் விஜயின் ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் நாள் அன்று மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.

கடந்த ஆண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியானபோது மாற்றுத்திறனாளிகள் திரையரங்கில் முதல் காட்சி பார்ப்பதற்கான ஏற்பாடு செய்திருந்தோம். வாரிசு திரைப்படம் வெளியாவதை ஒட்டி இன்றைக்கு திருச்சியில் உள்ள புத்தூர் அமைதி நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்களோடு இணைந்து வாரிசு பொங்கல் கொண்டாடப்பட்டது என்றார்.

இந்த விழாவில் மன்னார்குடி மும்பை பவுல் ஜீவா ஞானவேல் பிரகாஷ் சரண்ராஜ் லோகநாதன் மண்ணச்சநல்லூர் சுரேஷ், மன்னார்குடி சந்தோஷ், புத்தூர் நடராஜ், மலைக்கோட்டை நசீர், மண்ணச்சநல்லூர் ஆனந்த் தினேஷ் உய்யக்கொண்டான் திருமலை பாலாஜி தொட்டியம் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வாரிசு பொங்கல் கொண்டாடினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn