திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஆய்வு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து அதிகாலை மேயர் அன்பழகன் , சுகாதார அலுவலர் வினோத் கண்ணாவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நடைபாதையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் அறிவுரை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision