சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் - பக்தர்களிடம் பேரம் பேசும் வீடியோ வைரல்

சக்தி வாய்ந்த கோயில் முதன்மையானதும், திருச்சி மாவட்டத்திற்கு அடையாளமாக உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்தநிலையில் சபரிமலை சீசனை பயன்படுத்தியும், ஏராளமான பக்தர்கள் குவியவதை பயன்படுத்தும் கோவிலில் பணிபுரியும் நிர்வாகிகளை கையில் போட்டுக்கொண்டு ஒரு சில இடைத்தரகர்கள், பக்தர்களை மடக்கி உங்களை நேரடியாக சாமி பார்க்கக் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு நபருக்கு 200 ரூபாய் கொடுங்கள் நேரடியாக தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என பேரம் பேசுகின்றனர். இடைத்தரகர்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்களிடம் இடைதரகர்கள் பேரம் பேசும்வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மடக்கி பேசி இருநூறு ரூபாய் கொடுத்தால் ஒருவரை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக அந்த வீடியோ காட்சியில் உள்ளது.
இந்த மோசடி பின்னணியில் கோவிலில் இருக்கும் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் தற்போது பக்தர்களிடம் இடைத்தரகர்கள் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நம்பிக்கையோடு மனநிறைவிற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision