திருச்சி மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மலைக்கோயில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் மேம்பாட்டு வசதிகள் குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களிடம் பேசினார். தற்போது 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அப்பள்ளியில் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார்.

மேலும் மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி குறித்தும், அதன் ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO