அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து

திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியை சார்ந்த, பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி க. ஸ்ரீவித்யா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாணவியிடம் உயர் கல்வியை சிறப்பான முறையில் தேர்வு செய்து உயர்ந்த நிலைக்கு வர அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் . இந்தநிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், வட்ட செயலாளர் கருணாநிதி, மாணவியின் தந்தை கணேசன் ஆகியோர் உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision