ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம் போலீஸ் மூலம் மீட்பு

ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம் போலீஸ் மூலம் மீட்பு

 கடந்த 15.03.22-ந்தேதி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் ஆன்லைன் மூலமாக National Cyber Crime Reporting Portal{NCRP)-யில் கொடுத்த புகார் மனுவில் தான் தனது செல்போன் எண்ணுக்கு அவரது வங்கி விபரங்கள் (KYC) Upddate செய்யுமாறு குறுஞ்செய்தி வந்ததாகவும் மனுதாரர் உடனே அதை உண்மை என நம்பி அந்த லிங்க் வழியே தனது வங்கி விபரங்களை பதிவு செய்ததாகவும் உடனே தனது வங்கி கணக்கிலிருந்து மனுதாரரின் அனுமதியின்றி பணம் ரூ.1,98,707 எடுக்கபட்டதாகவும் எனவே தான் ஏமாந்து இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், உத்தரவுப்படி, மேற்படி புகார் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முறைகேடாக நடைப்பெற்ற பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில் மேற்படி ரூ.1.98.707 பணம் Pay U வழியாக Hala Play-க்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

 மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட வங்கியின் Legal Department-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரரின் வங்கி கணக்கில் அவர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் ரூ.198.707- திரும்ப சேர்க்கப்பட்டது.

மேலும் இது போன்று ஆன்லைன் வாட்ஸ்அப், பேஸ்புக். இன்ஸ்டாகிராம் போன்றவை மூலம் குறைந்த விலையில் பொருட்களை விளம்பரங்களின் மூலம் குறைந்த ஆன்லைனில் வரும் விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும்.

 வங்கியிலிருந்து பேசுவதாக கூறுவதையோ, செல்போன்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளையோ நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் OTPக்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930 அல்லது 155260-ஐ விரைவாக தொடர்பு கொள்ளும்பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுதர இயலும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO