மது அருந்த பணம்கேட்டு தரமறுத்த நபர் கொலை - சரித்திர பதிவேடு ரவுடிக்கு 5 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம்

மது அருந்த பணம்கேட்டு தரமறுத்த நபர் கொலை - சரித்திர பதிவேடு ரவுடிக்கு 5 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம்

கடந்த (06.07.2019)-ந் தேதி பொன்மலை காவல்நிலைய பகுதியில் அம்மன் டீ கடை நடத்தி வருபவரிடம் மது அருந்த பணம்கேட்டு தரமறுத்த நபரை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பபதிவு செய்து, வழக்கின் எதிரியான மேலகல்கண்டார்கோட்டை, பனக்கால் தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி பிரபாகரன் (40), த.பெ.முத்து என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 31.10.2019-ந்தேதி மேற்படி எதிரி ரவுடி பிரபாகரன் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன், மேற்படி எதிரி பிரபாகரன் என்பவருக்கு 294(b) இ.த.ச பிரிவு-ன்படி 3 மாதம் தண்டனையும், இ.த.ச 324 பிரிவின்படி ஒரு வருட சிறை தண்டனையும், இ.த.ச 302 பிரிவின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும் விதித்தும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கிற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் வாதாடினார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய பொன்மலை காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision