மூக்குத்திக்காக மூதாட்டி கொலை-குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம்

மூக்குத்திக்காக மூதாட்டி கொலை-குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா  மேலத்தெருவை சேர்ந்த  ராசம்மாள்.  04.05. 2025-ஆம் தேதி போசம்பட்டியில் உள்ள தனது சகோதரர் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு  திருவிழாவிற்கு சென்று உள்ளார். அன்று 5 மணி அளவில் பன்னீர் செல்வத்திடம்  தேநீர் கேட்டதால் தேநீர் வாங்குவதற்காக வியாழன் மேட்டிற்கு சென்று மீண்டும் 6:00 மணிக்கு

வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது அக்கம் பக்கத்தினர் பன்னீர் செல்வத்திடம் உனது அக்காள் மூக்கு அறுபட்டு தலையில் பலத்த காயத்துடன் வயல் பகுதியில் இறந்த நிலையில் கிடக்கிறார் என்று கூறினார். அதன் பெயரில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ. செல்வரத்தினம் அவர்கள் உத்தரவின் பெயரில் ஜீயபுரம் காவல் கண்காணிப்பாளர்

பழனி அவர்கள் மேற்பார்வையில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கணேசபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணா என்பவர்  2 கிராம் மூக்குத்திக்காக கொலை செய்து அவர் அணிந்திருந்த 2 கிராம் மூக்குத்திய பறித்து சென்று விட்டதாக தெரிய வந்தது. 09.05.2025 ஆம் தேதி குணாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

குணாவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வரத்தினம் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை  பிறப்பிக்கப்பட்டு இன்று (03.06. 2025 )தேதி சிறையில் உள்ள அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025  முதல் தற்போது வரை 39 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision