வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கிய ஒலிம்பிக் தடகள வீராங்கனை

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கிய ஒலிம்பிக் தடகள வீராங்கனை

திருச்சி ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஒலிம்பிக் தடகள வீராங்கனை தனலட்சுமி கலந்து கொண்டார்.

தான் கடந்து வந்த பாதையையும் மாணவர்கள் விளையாட்டில் எப்படி தங்களை ஈடுபடுத்தி முன்னேற வேண்டும் என்பதைப் பற்றியும் பேசினார். விழாவில் பள்ளியின் தலைவர் கோபிநாதன், துணைத் தலைவர் லக்ஷ்மி பிரபா கோபிநாதன், இயக்குநர் வரதராசன், கல்வி ஆலோசகர் மலர்விழி, முதல்வர் நளினி, துணை முதல்வர் ஆரோக்கிய ரீனா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision