காகித ஆலை பணியாளர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம்

காகித ஆலை பணியாளர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள காகித ஆலை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனம்(அலகு 2)-ல் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணியாளர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி செவ்வாய்க்கிழமை மாலை பணியாளர்கள் மனிதவள அலுவலகம் முகப்பில் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.என்.பி.எல் தொழிலாளர் சங்கம் கெளரவத்தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பள்ளிக்கூடம் கட்டிடம் கட்டியும் இதுவரை திறக்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்தும், காலனியில் வீடுகளை அதிகப்படுத்திடவும், விடுதி கட்டி தரவும், அடிப்படை வசதிகள் வேண்டியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.       

      

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO