திருச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் உதவி!!

திருச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் உதவி!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டு மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால்,மணிகண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 100 நபர்களுக்கும், 50 ஆதரவற்றோருக்கும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின் பேரில் உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குற்றம் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் ஆகியோர் உணவு வழங்கினார்.