முசிரி புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- சிக்கிய சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை

முசிரி புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- சிக்கிய சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை

முசிரி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த சிறுவனை பிடித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர். 

முசிரி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த காவல்துறையினர், முசிரி அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் சேர்ந்த சரவணன் என்பவரின் 16 வயது மகன் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. சிறுவனை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். 

சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்ததையடுத்து பெற்றோர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn