ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்  தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள்  அமர்வதற்கு இருக்கை வசதி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் ரூபாய் 100 கட்டண தரிசனம், கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதுக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின் குழுமத் தலைவர் எம்.கருணாநிதி ரூபாய் ஏழு லட்சத்து இருபதாயிரம் மதிப்புடைய 60 சில்வர் மேசைகளையும்,

கரூரை சேர்ந்த பக்தர் .ரமேஷ் பாபு மூன்று லட்சத்து அறுபதாயிரம் மதிப்புடைய 30 சில்வர் மேசைகளையும், ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்.ஆஞ்சநேயலு இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மதிப்புடைய 20 சில்வர் மேசைகளையும்,

கேலக்ஸி டிராவல்ஸ் .ரவி ஒரு லட்சத்தி இருபதாயிரம் மதிப்புடைய 10 சில்வர் மேசைகளையும், சுவேனந்தர் ரூ.12,000/-ம் மதிப்புடைய ஒரு சில்வர் மேசைகளையும் மற்றும் ஸ்ரீரங்கம் மங்களம் ஹோம் பில்டர்ஸ் முரளி ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய பத்து சில்வர் தண்ணீர் டிரம்களையும் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்துவிடம் வழங்கினர்.

உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் , தலைமையாரியர் புலவர் கிருஷ்ணா , கண்காணிப்பாளர் (பொறுப்பு ) சுதர்சன்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO