திமுக ஆட்சியில் நிச்சயம் ஶ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. ஶ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் பழனியாண்டி உறுதி.

திமுக ஆட்சியில் நிச்சயம் ஶ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. ஶ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் பழனியாண்டி உறுதி.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி போட்டியிடுகிறார். இதனையடுத்து முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய பழனியாண்டிக்கு ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..... ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் உள்ள வடக்கு வாசல் அருகே தடுப்பணை கட்டுப்படும். மாநகராட்சி அறிவிக்கப்பட்டது முதல் இங்கு பேருந்து நிலையம் இல்லை. அடிமனை பிரச்சினையை சரிசெய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன். அடிமனை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் சட்ட வல்லுனர்களை கொண்டு அதற்கான தீர்வு திமுக ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மக்களுக்கு கள்ளிக்குடி மார்க்கத்தால் பயனுள்ளது என்று மக்கள் கூறினால் அந்த கல்லுகுடி மார்க்கெட்டை முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதிமுக ஆட்சியில் செண்ட் பற்றியும் வாழை பதனிடும் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் ஆனால் இதுவரை அது அமைக்கப்படவில்லை எனவே இவற்றை திமுக நிச்சயம் நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I