தமிழக அமைச்சர்கள் லஞ்ச பட்டியல் விரைவில் வெளியாகும் - திருச்சியில் கமல் பேட்டி!!

தமிழக அமைச்சர்கள் லஞ்ச பட்டியல் விரைவில் வெளியாகும் -  திருச்சியில் கமல் பேட்டி!!

திருச்சியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசுத் துறையில் சான்றிதழ், மின்னிணைப்பு. உள்ளிட்டவைகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது என்பது குறித்த லஞ்ச பட்டியலை அவர் வெளியிட்டார். 

Advertisement

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது.... "திருச்சியில் எங்கள் பிரச்சாரத்திற்கு பெரும் எழுச்சி கிடைத்துள்ளது. இது மேலும் எங்களுக்கு நம்பிக்கையை பெருக்கும். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பேன். அதிமுக குறித்து நான் வைத்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் மறுப்பு அளித்திருப்பது, மாறாக இருக்குமே தவிர, மறுப்பாக இருக்காது. எங்கள் இலக்கு ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர் இன்டர்நெட் கனெக்சன் உடன் தருவதே. ரஜினிகாந்த் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எல்லா நகரங்களும் துணை தலைநகரமாக மாற்ற வேண்டும். விவசாயி மதிக்காத நாடு வீழ்ச்சி அடையும். டார்ச்லைட் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் அதற்கான சட்டரீதியான முயற்சியை எடுத்துச் செல்கிறோம்" என்று கூறிய அவரிடம் அமைச்சர்கள் லஞ்ச பட்டியல் எப்போது வெளியிடுவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது..... விரைவில்.... என்றார்.

Advertisement

பேட்டியின்போது பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.