தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சியில் தமிழர் ஒத்துழையாமை தொடக்கம்!

தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சியில் தமிழர் ஒத்துழையாமை தொடக்கம்!

தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலை உள்ளிட்டவற்றில் பணியிடங்களை தமிழர்களுக்கே ஒதுக்க வேண்டும்,

Advertisement

வட மாநிலத்தவர்களுக்கு அதிக அளவிலான தமிழக பணியிடங்களை கொடுப்பதனால் தமிழர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவிக்கின்றனர்,

Advertisement

எனவே வடமாநிலத்தவர்கள் வேலையில் அமர்த்துவது புறக்கணிக்கப்பட வேண்டும், 

தமிழ்நாடு அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கு வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒத்துழையாமை யை கடைப்பிடிப்போம்! உரிமை மீட்போம்! என்ற பதாகைகளுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.