திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் மூடப்படுகிறதா?

திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் மூடப்படுகிறதா?

திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்திற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.81.4 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 மார்ச் மாதம் தொடங்கியது. இதில், அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலைய பகுதி, ஜங்ஷன் ரயில் நிலையம், எடமலைப்பட்டி புதூர் சாலை, சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டு தற்போது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் ஜங்ஷன் பழைய மேம்பாலத்தின் வழியாக இருவழிப் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. மாநகரின் பழமை வாய்ந்த ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் விரைவில் மூடப்பட உள்ளது. இந்தப் பழைய பாலத்தை இடித்து புது மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஜங்ஷன் பழைய மேம்பாலம் இடிக்கப்பட்டு புது மேம்பாலம் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஓரிரு வாரங்களில் பழைய பாலம் மூடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல மாநகர போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision